![rajini _ (43)](https://awakeindiapac.com/wp-content/uploads/2023/10/rajini-_-43.jpg)
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று செல்லப் பெயரால் அழைப்பார்கள். தற்போது இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘ஜெயலர்’ இப்படமானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று வசூலையும் வாரி குவித்தது. ஜெயிலர் படத்தை வெளியிட்டின் போது கூட அவர் இமயமலை பயணத்தில் இருந்தார் .
ஒருமுறை இவர் ஒரு கோயில் தூணில் அருகில் அமர்ந்திருந்தார். வழக்கம் போல் மேக்கப் இல்லாமல் எளிமையான உடை யில் இருந்தார்.அது ரஜினிகாந்த் என்பதை உணர ரசிகர்கள் கூட இரண்டு முறை பார்க்க வேண்டும், ரஜினிகாந்த் அப்படி அமர்ந்திருப்பதை பார்த்த ஒரு பெண் அது ரஜினிகாந்த் என்று தெரியாமல் அவருடைய தோரணையும் உடையும் பார்த்து பிச்சைக்காரர் என்று நினைத்தார்.
அந்த பெண்மணி ரஜினிகாந்திடம் சென்று பத்து ரூபாய் அன்பளிப்பாக கொடுத்துள்ளார். ரஜினிகாந்த் அந்த பத்து ரூபாயை சிரித்துக் கொண்டே வாங்கினார். அந்த சிறிது நேரம் தங்கி இருந்த ரஜினிகாந்த் தனது காரில் சென்றார். அப்போதுதான் அன்னதானம் செய்த பெண் தன் தவறு செய்ததை உணர்ந்து அவர் யாரென்று தெரிந்ததும் அவரது வாகனத்திடம் விரைந்தார் அவரிடம் மன்னிப்பும் கேட்டார் அப்போது ரஜினிகாந்த் புன்னகை மட்டும் பதில் அளித்தார்.