பிக் பாஸ் வீட்டை விட்டு பணப்பெட்டியுடன் வெளியேறிய முக்கிய போட்டியாளர்…. இத்தனை லட்சமா?…இந்த ட்விஸ்ட்ட நாங்க எதிர்பார்க்கலையே…

பிக் பாஸ் சீசன் 6 வீட்டை விட்டு தற்பொழுது பணப்பெட்டியுடன் முக்கிய போட்டியாளர் ஒருவர் வெளியேறி உள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது அக்டோபர் மாதம் 9தேதி பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி இன்றுடன் 100வது நாளை நிறைவு செய்துள்ளது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சில போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

   

தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் இறுதி வாரத்தில் பணப்பெட்டி வைக்கப்படும் .இதில் டைட்டிலை வெல்ல மாட்டோம் என்று நினைக்கும் போட்டியாளர் அந்த பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார். அந்த வகையில் இந்த சீசனில் எப்பொழுது பணப்பெட்டி வைக்கப்படும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த நாள் முதலே அசீம் இன்று வரை சண்டை போடுவதை மட்டுமே வழக்கமாக கொண்டுள்ளார். அதேபோல விக்ரமனும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று முன்னிலையில் தான் உள்ளார். எனவே இந்த சீசனின் டைட்டிலை விக்ரமம் தான் வெல்வார் என்று சமூக வலைதளங்களில் பரவலாக கூறப்பட்டு வருகிறது.

இரண்டாம் இடத்தை அஸீமும், அதேபோல மூன்றாம் இடம் சிவினுக்கும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் நூறாவது நாளில் பிக் பாஸ் வீட்டில் பணப்பெட்டி வந்துள்ளது. இந்த பணப்பெட்டியை யார் எடுப்பார் என்று ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த நிலையில் கதிரவன் போட்டியாளர்கள் தடுத்தும் கேட்காமல் எடுத்துள்ளார்.

தற்பொழுது போட்டியாளர் கதிரவன் பிக் பாஸ் வீட்டை விட்டு பணப்பெட்டியுடன் வெளியேறி உள்ளார். அமுதவணன் தான் பணத்தை எடுத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ரசிகர்களுக்கு ட்விஸ்ட் வைக்கும் விதமாக 3 லட்சம் பணப்பெட்டியுடன் கதிர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளார்.