பரபரப்பான திருப்பங்களுடன்… ‘மௌனராகம்’ சீரியலில் களமிறங்கிய பிரபல நடிகை… சூடுபிடிக்கப் போகும் தொடர்… வைரல் தகவல் இதோ…

‘மௌன ராகம்’ சீரியலில் களமிறங்கிய பிரபல நடிகை குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் மெகா ஹிட் ஆக சென்று கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று ‘மௌன ராகம்’ இந்த சீரியலின் முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டு வருகிறது. சக்தி என்ற கதாபாத்திரத்தை சுற்றி தான் இந்த சீரியலின் கதை நகர்ந்து கொண்டுள்ளது.

   

அப்பா மகள் பாசப் போராட்டத்தையும், இசையையும் மையமாகக் கொண்டு ஒளிபரப்பப்படும் இந்த சீரியல் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்று கூறலாம். தற்போது இந்த சீரியலில் கடந்த சில வாரங்களாக பரபரப்பான பல திருப்பங்களும் உண்மையும் தெரிய வந்துள்ளது. தற்பொழுது இந்த சீரியலில் சக்தி தனது மாமியார் கடத்தி வைத்திருந்தது ஷீலா என்பதை கண்டுபிடித்து விட்டார்.

இதை தொடர்ந்து சக்தி தனது குடும்பத்தின் முன்னிலையில் சீலா தான் கடத்தி வைத்திருந்தார் என்பதை கூறப் போவதாக ப்ரோமோ இணையத்தில் வெளிவந்துள்ளது. இதைத்தொடர்ந்து என்ன நடக்கப்போகிறது என்பதை காண ரசிகர்களும் மிகுந்த ஆவலில் காத்திருக்கின்றனர். இதை தொடர்ந்து ரசிகர்கள் சீரியல் முடிய போகின்றதா என்று கேள்விகளை எழுப்பி வந்தனர்.

ஆனால் இனிமேல் தான் பல சுவாரசியமான காட்சிகள் வரப்போவதாக கூறி வருகின்றனர் சீரியல் குழுவினர். இந்நிலையில் மௌனராகம் சீரியலில் தற்போது பிரபல நடிகை ஒருவர் களமிறங்கியுள்ளார்.

அதாவது இந்த சீரியலில் ஷாலினி கதாபாத்திரத்தில் நடிகை ரேஷ்மா நாயர் தற்பொழுது இணைந்துள்ளார். இவருக்கான எபிசோடுகள் தற்பொழுது ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. இனிமேல் தான் சீரியல் களைகட்ட போகிறது என்று ரசிகர்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.  பொறுத்திருந்து பார்க்கலாம் என்ன நடக்கப் போகிறது என்று.

 

View this post on Instagram

 

A post shared by Star Telly Tamil (@startellytamil)