83 வயதில் கேரம் விளையாடி….. தங்கம் மற்றும் வெண்கலப் பரிசை தட்டிச் சென்ற பாட்டி….. வைரலாகும் வீடியோ….!!!!

புனேவில் 83 வயதான பாட்டி ஒருவர் கேரம் விளையாட்டில் தங்கம் மற்றும் வெண்கலம் வென்ற வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. வயது எதற்கும் தடை இல்லை என்பது தொடர்ந்து நிருபனமாகி வருகின்றது. இன்று பெரும்பாலான மக்கள் 40 வயது ஆகிவிட்டாலே தங்களுக்கு வயதாகி விட்டது. இங்கே வலிக்கின்றது, அங்கே வலிக்கின்றது என்று கூறிக்கொண்டு மூளையில் முடங்கி விடுகிறார்கள்.

   

ஆனால் அதையும் தாண்டி சில வயதானவர்கள் பல விஷயங்களில் சாதித்து வருகிறார்கள். அது தொடர்பான வீடியோக்களை இணையதளங்களில் நாம் நாள்தோறும் ஒரு வீடியோவானது பார்த்துவிடுகிறோம். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை 83 வயதான பாட்டியின் பேரன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

அதில் புனேவில் நடைபெற்ற புனேவின் ஆல்-மகர்பட்டா சிட்டி கேரம் போட்டியில் இரட்டையர் பிரிவில் தங்கம் மற்றும் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் போன்ற பரிசுகளை எனது 83 வயதான ஆஜியால் என்ற பாட்டி வென்றுள்ளார். அவரால் நான் ஈர்க்கப்பட்டுள்ளேன் என்று அவர் தெரிவித்திருந்தார். இதை பார்த்த பலரும் ஆச்சரியப்பட்டு போய் உள்ளனர். அவர் கேரம் விளையாடும் வீடியோவையும் அத்துடன் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வருகின்றது.