பழைய குற்றால அருவியில் தவறி விழுந்த குழந்தை….. துரிதமாக செயல்பட்டு மீட்ட இளைஞர்…. வைரலாகும் வீடியோ….!!!

குற்றால அருவியில் தவறி விழுந்த சிறுமியை துரிதமாக செயல்பட்டு இளைஞர் ஒருவர் மீட்ட வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. கோவையில் இருந்து பழைய குற்றால அருவிக்கு குழந்தையுடன் குளிக்க வந்த இடத்தில் குழந்தை தவறி விழுந்து இழுத்துச் செல்லப்பட்ட குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. கோவையில் இருந்து ஒரு தம்பதியினர் பழைய குற்றால அருவிக்கு தனது நான்கு வயது குழந்தையுடன் குளிக்க வந்திருந்தன.

   

அப்போது குளித்துக் கொண்டிருந்த போது அருவியில் இருந்த தடாகத்தில் குழந்தை ஒன்று தவறி விழுந்தது. 100 அடி ஆழத்தில் விழுந்த குழந்தை இழுத்துச் செல்லப்பட்டது. அறிவிக்கு அருகே நின்று கொண்டிருந்த விஜயகுமார் என்கின்ற இளைஞர் விரைந்து செயல்பட்டு குழந்தையை மீட்டார். பாறையின் இடுக்கில் சிக்கிய குழந்தையை துரிதமாக செயல்பட்டு அந்த நபர் மீட்டார் .

குழந்தை எந்த காயம் இன்றி உயிர் தப்பியது, இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலானது. இந்த இளைஞருக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வந்தனர். குழந்தையுடன் செல்லும் பெற்றோர்கள் குழந்தையை எவ்வளவு கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.