பிரபல நடிகையை 4வது திருமணம் செய்யும் நடிகர் நரேஷ்… ‘அவருக்கும் எனக்கும் இன்னும் விவாகரத்து ஆகவில்லை.. எப்படி 4வது திருமணம்?’… சரமாரியாக கேள்வி எழுப்பும் 3வது மனைவி….

நடிகர் நரேஷ் பாபு தனது மூன்றாவது மனைவியை இன்னும் விவாகரத்து செய்யாத நிலையில் நான்காவது திருமணத்தை எப்படி நடத்த முடியும் என்று அவரது மனைவி சரமாரியாக கேள்விகளை எழுப்பி உள்ளார்.

பழங்கால தெலுங்கு நடிகர் கிருஷ்ணா. இவரது மூத்த மகன் நரேஷ் பாபு. தனது தந்தையை போல தெலுங்கு திரையுலகில் தனி இடத்தை பிடித்துள்ளார். அதுபோல அவரது தம்பி மகேஷ்பாபு, இவர் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராகவர். நடிகர் நரேஷ் பாபு ஏற்கனவே திருமணம் 2 திருமணங்களை செய்து கொண்டு மனைவிகளை விவாகரத்து செய்துள்ளார்.

   

இந்த நிலையில் மூன்றாவதாக அவர் ரம்யா ரகுபதியை திருமணம் செய்து கொண்டு அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. தற்பொழுது இவர் 45 வயது நடிகை பவித்ரா லோகேஷ் உடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறப்பட்டது. பவித்ரா லோகேஷ் கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் கன்னடத்தில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘வீட்டுல விசேஷம்’ போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ராதா மோகன் இயக்கிய கவுரவம், விஷாலின் அயோக்கிய, விஜய் சேதுபதியுடன் க \பெ ரணசிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் நரேஷ் பாபு பவித்ரா லோகேஷும் திருமணம் செய்ய போவதாக இணையத்தில் வீடியோக்கள் வெளியாகி வைரலானது.

புத்தாண்டு முன்னிட்டு இருவரும் முத்தம் கொடுக்கும் வீடியோ வெளியிட்டு விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தனர். ஆனால் இந்த வீடியோ விளம்பர வீடியோ என்று சினிமாவில் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் நரேஷ் பாபுவின் மூன்றாவது மனைவி ரம்யா ரகுபதி ‘தன்னை இன்னும் விவாகரத்து செய்யாததால் பவித்ரா லோகேஷனை திருமணம் செய்து கொள்ள விட மாட்டேன்’ என்று கூறி தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் .

சமீபத்தில் நடிகர் நரேஷ் நடிகை பவித்ரா லோகேஷுன் தனியாக ஹோட்டலில் இருந்த பொழுது மூன்றாவது மனைவியாக ரம்யா ரகுபதி அவர்களை காலணி கொண்டு அடித்ததாக கூறப்பட்டது. இந்த வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆனது. இந்நிலையில் நடிகர் நரேஷிடம் அவரது மூன்றாவது மனைவி தற்பொழுது சரமாரியாக கேள்விகளை எழுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.