![lokesh (1)](https://awakeindiapac.com/wp-content/uploads/2023/12/lokesh-1-1-678x381.jpg)
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை நயன்தாரா. தமிழில் 2005 ஆம் ஆண்டு வெளியான ‘ஐயா’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தற்போது பாலிவுட், கோலிவுட் என சினிமாவில் நடித்து கலக்கி கொண்டு வருகிறார் நயன்தாரா. சினிமா பத்திரிக்கையாளரான பயில்வான் நயன்தாராவை பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
அதில் நடிகர் சிம்புவை காதலித்தது முதல் பிரபு தேவாவுடன் காதலில் விழுந்தவரை, அதன் பின்பு தான் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்தது பற்றியும் எல்லாத்தையும் புட்டு, புட்டு வைத்துள்ளார். மேலும் சினிமாவில் பிசியாக நடித்து வந்தாலும் தற்போது புதுப்புது பிசினஸீல் இறங்கி பணம் சம்பாதிக்க வேண்டும் என நயன்தாரா ஆசைப்படுவதாகவும் இந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட மிக்ஜாம் புயலால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு நயன்தாரா உதவியும் செய்தார். அதோடு அவரது பிசினஸ் பொருட்களை பற்றிய விளம்பரத்தை செய்ததாகவும் கூறப்படுகிறது. மக்களின் இந்த நிலைமையில் இப்படி பண்ணுவது சரியா? இதற்கு பயில்வான் நயன்தாராவை பார்த்து, இப்படி எல்லாம் செய்வதற்கு பிச்சை எடுக்கலாம் என்றும், இதற்கு தான் ஆண்டவன் உனக்கு பிள்ளையை கூட கொடுக்கவில்லை என்றும் எல்லை மீறி நயன்தாரா பற்றி பேசி உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பயில்வான் கருத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.