சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக பலத்த மழை பெய்ததில் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வீடு, உணவு என மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் சில இடங்களில் மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் சாலைகளில் பல அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள்ளுள் மழைநீர் புகுந்து வரும் சூழலில் மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதில் பல சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகளின் வீடுகளிலும் வெள்ள நீர் புகுந்து பெரிதும் பாதிப்புள்ளாகி வருகின்றனர்.
அரசு மற்றும் தனியார் நிறுவனம் சார்பாகவும் தற்பொழுது மீட்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் சினிமா பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சேர்மன் கலாநிதி மாறன் அவர்கள் முதல்வர் மு. க. ஸ்டாலினை இன்று சந்தித்துள்ளார்.
பின் ரூ.5 கோடி வெள்ள நிவாரண நிதிக்கான செக் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை பார்த்த இணைய வாசிகள் பாராட்டி வருகின்றனர்.