நடிகர் விஜய்-யா இப்படி செய்தாரு… ஷூட்டிங்கில் நடிகை தூங்கும் போது விஜய் செய்ததை பகிர்ந்த ராஷ்மிகா…!!

நடிகை ராஷ்மிகா மந்தனா

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகை வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் விஜய் நடிப்பில் வாரிசு என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். சமீபத்தில் ஒரு பேட்டியில், இந்த படத்தின் ஷூட்டிங்கில் நடந்த சில ஸ்வரஸ்யமான விசயத்தை பற்றி நடிகை ராஷ்மிகா கூறியுள்ளார்.

   

அப்போது ஷூட்டிங்கில், நான் நாற்காலியில் அமர்ந்து பக்கத்தில் இருந்த டேபிளில் தலையை சாய்த்து தூங்கியதை, நடிகர் விஜய் பார்த்தார். பின் இயக்குரிடம் சென்று, இங்கே பாருங்க.. ஷூட்டிங் வருகிறார்.. சாப்பிடுகிறார்… தூங்குகிறார்.. இதை அடுத்த நாளும் செய்கிறார் என்று போட்டு கொடுத்தார்.

மேலும் இந்த படத்தில் எனக்கு அவ்வளவு ஸ்கோப் இல்லை என்றாலும், விஜய்க்காக மட்டுமே இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்றும் கூறினார். அந்த படத்தில்  எனக்கான சீன்களும் அந்த அளவு இல்லை.

 

எனவே நான் என்ன செய்வது, படுத்து தூங்கிவிட்டேன். ஆனால் இப்படி விஜய் செய்ததை நான் மறக்கவே மாட்டேன். இப்படி விஜய் சார் பண்ணுவார் எனவும் நான் நினைக்கவில்லை. இவ்வாறு விஜய் பற்றி ஓப்பனாக நடிகை ராஷ்மிகா கூறியுள்ளார்.