‘கோலி சோடா’ நடிகை சாந்தினிக்கு திருமணமாகி குழந்தை உள்ளதா?…வைரலாகும் புகைப்படம்…

தமிழ் சினிமாவில் புது முகங்களை வைத்து பல திரைப்படங்கள் எடுத்துள்ளனர் அவ்வாறு புது முகங்களை கொண்டு எடுக்கப்பட்டது தான் ‘கோலி சோடா’.

   

இப்படமானது   மிகப் பெரிய அளவில் ஹிட் அடித்தது. இந்தத் திரைப்படத்தில் முக்கிய நடிகர் நடிகைகள் என்னும் சொல்லக் கூடிய அளவிற்கு யாரும் இல்லை.

இப்படத்தை இயக்கியவர்  விஜய் மில்டன். இப்படத்தில் நடிகையாக நடித்திருப்பவர் சாந்தினி இவர் 1996 ஆம் ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி சென்னையில் பிறந்தார்.

இவர் படித்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். வில்லிவாக்கத்தில் உள்ள செயின்ட் ஜான் என்ற மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார்.

அதன் பின் சென்னையில் எத்திராஜ் கல்லூரியில்தன்னுடைய  கல்லூரி படிப்பை முடித்தார்.

இவருக்கு கோலிசோடா வாய்ப்பு கிடைத்தது எவ்வாறு என்றால் இவர் நண்பர் வீட்டிற்கு சென்று வந்து கொண்டிருக்கும்போது இயக்குனர் விஜய் மிலிட்டன் இவரை பார்த்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அவர் வீட்டிற்கு சென்று அவர்கள் பெற்றோரிடம் பேசி  நடிக்க சம்மதம் பெற்றார்.

இப்படத்திற்காக சாந்தினிக்கு பல விருதுகள் கிடைத்தன. அதன் பிறகு விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான 10 எண்றதுக்குள்ள என்ற படத்தில் விக்ரமுக்கு தங்கையாக நடித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு இயக்குனர் கிருஷ்ண ‘குரங்கு கையில பூ மாலை’ என்ற படத்தில் ஹீரோயினியாக நடித்திருந்தார்.

இப்படமானது  மக்கள் மத்தியில் வரவேற்பு  கிடைக்கவில்லை அதன்பின் தனது முழு கவனத்தையும் படிப்பில் செலுத்தி வந்தார் சாந்தினி.

நடிகை சாந்தினி சாரதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை உள்ளது.

தற்போது இவர்களின் குடும்ப புகைப்படம் ஆனது இணையத்தில் வெளியாகியுள்ளது அதை பார்த்த ரசிகர்கள் சாந்தினிக்கு குழந்தை இருக்கிறதா என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகிறார்கள்.