![mahalakshmi (2)](https://awakeindiapac.com/wp-content/uploads/2023/06/mahalakshmi-2.jpg)
பிரபல சீரியல் நடிகையான மகாலட்சுமி அனில் என்பவரை காதலித்து முதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. சன் மியூசிக் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர், சன் டிவியில் ஒளிபரப்பான ‘அரசி’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் கால்பதித்தார் .
யாமிருக்க பயமேன், செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘தேவதையை கண்டேன்’ சீரியல் மூலம் இவர் பிரபலமானார் .இந்த தொடரின் ஹீரோவாக நடித்த ஈஸ்வர் என்பவரை காதலித்ததாக கூறப்பட்டது.
இதைக்கேட்ட ஈஸ்வர் மனைவி போலீசில் புகார் அளித்தார் .ஈஸ்வர் மனைவி தற்கொலை முயற்சி வரை சென்று விட்டார். தற்பொழுது மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவிந்தரை இரண்டாவதாக திருமணம் முடித்து தனது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் நடிகை மகாலட்சுமி தந்தையர் தந்தை முன்னிட்டு தனது தந்தை மற்றும் மகனுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இப்புகைப்படத்தை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…