நடிகர் அஜித்தை மேடையில் அவமானப்படுத்திய நடிகை மீனாவின் அம்மா… பதிலுக்கு  அவர் என்ன செய்தார் தெரியுமா?…. வைரலாகும் தகவல் இதோ…

நடிகை மீனாவின் அம்மாவால் நடிகர் அஜித் மேடையில் அவமானப்பட்டதாக தற்பொழுது இணையத்தில் ஒரு செய்தி வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் சமீபத்தில் ‘துணிவு’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் வசூலில் சாதனையும் படைத்து வருகிறது. தற்பொழுது நடிகர் அஜித்தின் கடந்த கால வாழ்க்கையில் ஏற்பட்ட துயரமான சம்பவம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

   

நடிகர் அஜித்த தனது வாழ்க்கையில் பல கஷ்டங்கள் அவமானங்களை சந்தித்தவர். இவர் யாருடைய துணையும் இல்லாமல் தன்னை தானே செதுக்கி கொண்டு தற்பொழுது முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். மேலும் இவர் தனது ரசிகர்களுக்காக எதையும் செய்யக் கூடியவர். எனவே இவருக்கு பல கோடி ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் நடிகை மீனாவின் அம்மா மேடை ஒன்றில் நடிகர் அஜித்தை அவமானப்படுத்திய  தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது

அதாவது நடிகை மீனாவும் நடிகர் அஜித்தும் இணைந்து ஆனந்த பூங்காற்றே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தனர். அப்பொழுது நடிகர் அஜித்தை விட நடிகை மீனா பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். இந்நிலையில் நடிகர் அஜித்திற்கு மீனா ஒரு விருது விழாவில் விருதை வழங்கினார். அப்பொழுது அஜித்துடன் நடனமாட நடிகை மீனாவை கேட்டிருந்தனர்.

இதை கேட்ட நடிகை மீனாவின் அம்மா உடனே மீனாவை அங்கிருந்து அழைத்துச் சென்று விட்டாராம். இதற்கு காரணம் ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன்  நடித்து வரும் தனது மகள் இவருடன் நடனம் ஆடுவதா என்று எண்ணி நடிகர் அஜித்தை அவமானப்படுத்தி மீனாவை கூட்டிச் சென்றுள்ளார்.

ஆனால் இதை மனதில் வைத்துக் கொள்ளாத நடிகர் அஜித் வில்லன், சிட்டிசன் போன்ற திரைப்படங்களில் மீனாவை தான் நடிக்க வைக்க வேண்டும். என்று கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. தற்பொழுது இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது. அதோடு இதைக் கேள்விப்பட்ட நடிகர் அஜித்தின் ரசிகர்கள் பெருந்தன்மையை பாராட்டி வருகின்றனர்.