பாவாடை தாவணியில் ரசிகர்களை சுண்டி இழுத்த பிக் பாஸ் ஜனனி… மெய் மறந்து பார்க்கும் ரசிகர்கள்…. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ…

பிக் பாஸ் பிரபலமான ஜனனி தற்பொழுது பொங்கல் ஸ்பெஷலாக பாவாடை தாவணியில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆனது தற்பொழுது விஜய் டிவியில் 5 சீசன்களை கடந்து ஆறாவது சீசனில் காலடி எடுத்து வைத்துள்ளது. இந்த பிக் பாஸ் சீசன் 6 தற்பொழுது இறுதிக்கட்டத்தையும் எட்டியுள்ளது.  தற்பொழுது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் இலங்கையைச் சேர்ந்த ஜனனி.

   

இவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தார். பிக் பாஸ் வீட்டில் களமிறக்கப்பட்ட 21 போட்டியாளர்களில் ஒருவராக பிக் பாஸ் வீட்டில் காலடி எடுத்து வைத்தார் ஜனனி. இவர் களமிறங்கிய முதல் நாளிலேயே இவருக்கு சமூக வலைத்தளங்களில் ஜனனி ஆர்மி தொடங்கப்பட்டது. இவரது ரசிகர்கள் இவரை செல்லமாக குட்டி திரிஷா என்றும் அழைத்தனர்.

நிகழ்ச்சியின் இறுதிவரை சென்று டைட்டிலே வெல்வார் என்று ரசிகர்கள் பலராலும்  எதிர்பார்க்கப்பட்ட ஜனனி பிக் பாஸ் வீட்டில் தனது செயல்களால் மக்கள் மத்தியில் குறைந்த வாக்குகள் பெற்று நிகழ்ச்சியின் பாதியிலேயே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இவரது எவிக்ஷன் அவரது ரசிகர்களை மிகவும் கவலை அடைய செய்தது.

இந்நிலையில் பிக் பாஸ் விட்டு வெளியேற்றப்பட்ட ஜனனி இலங்கைக்கு செல்லாமல் தற்பொழுதும் இந்தியாவில் தங்கி உள்ளார். இவர் அவ்வப்பொழுது ஃபோட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது தைப்பொங்கல் ஸ்பெஷலாக பாவாடை தாவணியில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் மெய் மறந்து பார்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.