மாடியில் இயற்கையாக காய் கறிகளை உற்பத்தி செய்யும் நடிகை சீதா… புகைப்படம் உள்ளே…

80s களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சீதா. இவர் ஜூலை 13ஆம் தேதி 1968 ஆம் ஆண்டு பிறந்தார்.

   

இவர் ‘ஆண்பாவம்’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து இவர் பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார்.

இவர்  தமிழில் உன்னால் முடியும் தம்பி, ஆயிரம் பூக்கள் மலரட்டும், பாரிஜாதம், ஆதி, வியாபாரம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாள படங்களில் நடித்துள்ளார். 80s களில் மிகவும் பிசியாக  நடித்து கொண்டு இருந்தார்.

பல படங்களுக்கு  நடிக்க நேரமில்லாத காரணத்தினால்  பட  வாய்ப்பைக் கூட ஒதுக்கி வைத்தார். இவர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான ‘பாதை’ என்ற படத்தில் கதாநாயகன் நடித்திருந்தார்.

இப்படத்தின் மூலமாக இருவருக்கும் காதல் ஏற்பட்டு சீதா தன் வீட்டை எதிர்த்து பார்த்திபனை திருமணம் செய்து கொண்டார்.

இதன் பிறகு  சினிமா விட்டு விலகி தன்னுடைய குடும்பத்தை கவனித்து வந்தார்.இவர்களுக்கு அபிநயா, கீர்த்தனா,என்ற மகளும்  வளர்ப்பு மகனாக ராதாகிருஷ்ணனும்  உள்ளனர்.

பிறகு சீதாவுக்கும் பார்த்திபனுக்கும் இடையே மன வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து பெற்றனர். சீதாவுடன் மூத்தமகள் அபிநயா உள்ளார் .

இளைய மகள் கீர்த்தனாவும் ராதாகிருஷ்ணனும் பார்த்திபனுடன் வசித்து வருகின்றனர்அதன் பிறகு தன்னுடைய நடிப்பை தொடங்கினார்.

அப்பொழுது அவருக்கு சினிமா துறையில் பெரிய வாய்ப்பு கிடைக்கவில்லை.அதன் பின்  சீரியலில் நடிக்க தொடங்கினார்.

சீரியலில் நடித்து வந்த சீதா சீரியல் நடிகர் சதீஷ் என்பவரை 2019 திருமணம் செய்து கொண்டார் பிறகு இவர்களின் மன வேறுபாட்டின் காரணமாகவும் விவாகரத்து பெற்றார்.

இவர் தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருப்பார் . தனது மாடி தோட்டத்தில் இயற்கையாக விளையும் காய்கறி எடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.தற்போது இந்த புகைப்படமான இணையத்தில் வெளியாகி  வருகிறது.