![sriya](https://awakeindiapac.com/wp-content/uploads/2023/06/sriya-1.jpg)
நடிகர் விஷால், ரீமாசென் நடிப்பில் உருவான ‘திமிரு’ படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி. இவரின் முரட்டுத்தனமான நடிப்புக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இப்படத்தில் ‘ஏலே இசுக்கு’ என்ற இவரது டயலாக் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. ஈஸ்வரி கதாபாத்திரத்தில் அவர் விட்ட சவுண்டு இன்றுவரை காதில் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறது.
இவர் முதன் முதலில் நடிகர் விக்ரமின் ‘சாமுராய்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார். பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே இவர் நடிகர் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பின்னர் குடும்பத்தை பார்த்துக் கொண்டு குழந்தையை வளர்ப்பதில் கவனம் செலுத்தினார். இதை தொடர்ந்து அவர் சினிமாவில் ‘அண்டாவ காணோம்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு சூப்பர் என்ட்ரி கொடுத்தார். இவர் நடிப்பில் வெளியான ‘சுழல்’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
தற்பொழுது நடிகை ஸ்ரேயா ரெட்டி பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நாயகனாக நடித்து வரும் சலார் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து RRR படத்தின் தயாரிப்பாளரின் அடுத்த படமாக தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் புதிய படத்திலும் நடிகை ஷ்ரேயா ஒப்பந்தமாகியுள்ளார்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ஸ்ரேயா ரெட்டி. இவர் தற்பொழுது தனது காந்தக் கண்களால் ரசிகர்களை வசீகரிக்கும் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வர்ணித்து உருகி வருகின்றனர்.