அக்கா, தங்கை இருவரையும் திருமணம் செய்துகொண்ட நவரச நாயகன் கார்த்திக்… பலரும் பார்க்காத குடும்ப புகைப்படங்கள்..

தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் கார்த்திக்.

   

இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அந்த முதல் படமே வெற்றி கொடுத்ததால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.

இந்த படத்தை தொடர்ந்து மௌன ராகம், ஆகாய கங்கை, லக்கி மேன், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் போன்ற பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

பின்னர் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் சினிமாவிலிருந்து சற்று விலகி இருந்த இவருக்கு,கடந்த 2015 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்தத் திரைப்படத்தில் வில்லனாக மாஸ் என்ட்ரி கொடுத்தார். இவர் கடந்த 1988 ஆம் ஆண்டு ராகினி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர்.அதன் பிறகு நான்கு வருடங்கள் கழித்து ராகினியின் தங்கை ரதியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் கார்த்திக்.

இவரின் மகன் கௌதம் கார்த்திக் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார்.

கௌதம் கார்த்திக் தமிழ் சினிமாவில் கடல் தொடங்கி ரங்கூன், ஹர ஹர மகாதேவகி, மிஸ்டர் சந்திர மௌலி, இருட்டு அறையில் முரட்டு குத்து மற்றும் ஆனந்தம் விளையாடும் வீடு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 

அதேசமயம் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் கடந்த வருடம் இறுதியில் தான் நடிகை மஞ்சிமா மோகன் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் இது பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்நிலையில் நடிகர் கார்த்திக் தனது முதல் மற்றும் இரண்டாம் மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும், குடும்ப புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.