39 வயதிலும் அதே இளமையில் ஜொலிக்கும் நடிகை திரிஷா… தளபதியுடன் எடுத்துக் கொண்ட க்யூட் புகைப்படம்… வைரலாக்கும் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் தற்பொழுது வரை ரசிகர்களின் மனதில் கனவுக்கன்னியாக தான் இடம்பெற்றுள்ளார். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் ஹிட்டானது. இடையில் கொஞ்சம் பிரேக் எடுத்த இவர் இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில்  குந்தவையாக நடித்து தமிழ் சினிமாவில் ஒரு சூப்பர் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

   

இதைத்தொடர்ந்து நடிகை திரிஷாவின் மார்க்கெட் தற்பொழுது எகிறியுள்ளது. தற்போது இவர் பல திரைப்படங்களில் கமிட்டாகி  பிசியாக நடித்துக் கொண்டுள்ளார். அந்தவகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ ‘ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை திரிஷா.

‘கில்லி’ திரைப்படத்தை தொடர்ந்து, இவர்களின் கூட்டணி 13 வருடங்களுக்குப் பிறகு இணைந்துள்ளது. எனவே இத்திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

நடிகர் விஜய் மற்றும் திரிஷா இருவரும் இணைந்து நடித்துவரும் இத்திரைப்படத்திற்கு லியோ என்று பெயரிட்டுள்ளனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

அங்கு குளிர் அதிகமாக இருக்கும் காரணத்தினால் தனது படபிடிப்புக்கான காட்சிகள் எடுக்கும் பொழுது மட்டும் காஷ்மீருக்கு சென்று வருகிறாராம் நடிகை திரிஷா. மேலும் இத்திரைப்படத்தை பற்றிய அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்பொழுது விஜய் மற்றும் திரிஷா இருவரும் விமானத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ’39 வயது ஆனாலும் நடிகை திரிஷா அதே இளமையில் இன்னும் ஜொலிக்கிறாரே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்…