அடடே நடிகை ஊர்வசியா இது?… இளம் வயதில் பார்க்க சும்மா நச்சுன்னு, சிக்குனு இருக்காங்களே…வைரலாகும் புகைப்படங்கள்….

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஊர்வசி. இவர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர். குடும்பம் சென்னைக்கு மாறியதால்  கோடம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரையிலும் படித்தார்.அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் அதிகமாக வந்ததால் படிப்பைத் தொடர முடியவில்லை.

   

இவர் 1979 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான’ கதிர்மண்டபம்’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார்.1983 ஆம் ஆண்டு வெளியான கே பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான ‘முந்தானை முடிச்சு’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து  பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.இவர் பல மேடை நிகழ்ச்சிகளிலும் , ஒரு சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

இவர் தமிழ் ,மலையாளம் ,தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிப்படங்களில் சுமார் 702 படங்களில்  நடித்துள்ளார்.நடிகை ஊர்வசி மலையாள நடிகரான மனோஜ் கே ஜெயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அதன் பிறகு இருவரின் மன கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து பெற்றனர்.

அதன் பிறகு தொழிலதிபரான சிவபிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.இவருக்கு கலாரஞ்சினி மற்றும் கல்பனா என இரண்டு மூத்த சகோதரிகள் உள்ளனர். இவர்கள் சில மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துள்ளனர்.தற்பொழுது இவர்  தனது சகோதரிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.