நீண்ட வருடங்களுக்குப் பிறகு… தனது மூத்த மகனை சந்தித்த பிக் பாஸ் தாமரை… என்ன ஒரு தாய் பாசம்… நீங்களே பாருங்க…

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கியவர் தான் நாடக கலைஞர் தாமரைச்செல்வி. ஆரம்பத்தில் இவர் தன்  வெகுளியான பேச்சால் அனைவரையும் ஈர்த்தார். மணப்பாறையைச் சேர்ந்த ராஜகுரு அம்சபிரியா நாடக குழுவில் தாமரைச்செல்வி நடித்துக் கொண்டிருந்தார்.

   

பின்னர் பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொண்டு இவர் மிகப் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார்.

இதைத் தொடர்ந்து அவர் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் தன்னுடைய கணவருடன் சேர்ந்து தனது நடன திறமையை வெளிக்காட்டினார். தற்பொழுது ஒரு youtube சேனல் ஒன்று ஆரம்பித்து அதன் மூலம் சம்பாதித்து வருகிறார்.

பிக் பாஸில் கிடைத்த பிரபலத்தை கொண்டு தற்பொழுது இயக்குனர் மாதவ் ராம் தாஸ் இயக்கத்தில் ”ஆழி ” என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் தாமரை நடிக்க இருப்பதாக தகவல்கள் சமீபத்தில் வெளியானது.

தற்பொழுது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார் தாமரைச்செல்வி. இவர் தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். பிக் பாஸ் தாமரை ஏற்கனவே ஒரு குழந்தை பெற்றவரை திருமணம் செய்தார். அவருடன் ஒரு மகனையும் பெற்றார்.

பின்ன அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். இதை தொடர்ந்து வேறு ஒருவரை திருமணம் முடித்துக் கொண்டார். தற்பொழுது தாமரை தனது முதல் கணவரின் மகனை நீண்ட வருடங்களுக்கு பிறகு சந்தித்துள்ளாராம்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இப்பொழுது இணையத்தில் பதிவு செய்துள்ளார் தாமரை. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்…