‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரை விட்டு விலகிய மற்றுமொரு நடிகை… அட இவரா?… இப்படியே போன கடைய காலி பண்ண வேண்டியது தான்…

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. இந்த தொடரில் கூட்டு குடும்பத்தை பற்றி கூறுவதால் இல்லத்தரசிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் இத்தொடர் 1150 எபிசோடுகளை கடந்து தற்போது சாதனையும் படைத்துள்ளது.

   

கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சீரியல்கள் என்றாலே பல நடிகர்கள், நடிகைகளின் மாற்றம் வழக்கம் தான். அந்த வகையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரிலும் பல நடிகர் நடிகைகள் இதுவரை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் குறிப்பாக இத்தொடரில் முல்லை கதாபாத்திரத்தை பற்றி கண்டிப்பாக கூறியே ஆக வேண்டும். இதுவரை இக்கதாபாத்திரத்தில் மட்டும் மூன்று நடிகைகள் மாறி உள்ளனர். முதலில் விஜே சித்ரா முல்லையாக நடித்திருந்தார். அவர் எதிர்பாராத விதமாக தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இவரை தொடர்ந்த முல்லை கதாபாத்திரத்தில் நடிகை காவியா நடித்து வந்தார்.

இவரும் சீரியலை விட்டு பாதியிலேயே வெளியேறினார். இவரை தொடர்ந்து தற்போது முல்லையாக வேறொரு நடிகை நடித்த வருகிறார். அதேபோல ஐஸ்வர்யா கதாபாத்திரத்திலும் மூன்று நடிகைகள் மாறி உள்ளனர். தற்பொழுது ஐஸ்வர்யாவாக நடித்து வரும் நடிகை சாய் காயத்ரி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் இருந்து விலகி விட்டதாக இணையத்தில் செய்திகள் வைரலாக்கப்பட்டு வருகிறது.

தற்பொழுது சாய் காயத்ரிக்கு பதிலாக புதிய ஐஸ்வர்யாவாக களமிறங்க இருப்பது முதலில் ஐஸ்வர்யாவாக நடித்துக் கொண்டிருந்த விஜே தீபிகா தான் என்று கூறப்படுகிறது. இவர் இந்த சீரியலை விட்டு விலக காரணம் அவரது முகத்தில் இருந்த பிம்பிள்ஸ் தான். இப்பொழுது அவர் அதை சரி செய்து விட்டாரா? என்று தெரியவில்லை.

ஆனால் இவர் மீண்டும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் ஐஸ்வர்யாவாக களமிறங்க போகிறார் என்ற செய்தி அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. இதை தொடர்ந்து அவரை பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.