![rajini _ (4)](https://awakeindiapac.com/wp-content/uploads/2023/10/rajini-_-4.jpg)
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் சிலம்பரசன். இவருடைய முழு பெயர் சிலம்பரசன்.இவர் தந்தையும் ஒரு நடிகர். இவர் 1984 ஆம் ஆண்டு வெளியான ‘உறவை காத்த கிளி’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.இவர் முதல் தாய் தங்கை பாசம் , ஒரு வசந்த கீதம் , என் தங்கை கல்யாணி , எங்க வீட்டு வேலன் , மோனிஷா என் மோனாலிசா,
ஒரு தாயின் சபாதம் , சம்சார சங்கீதம் , சாந்தி என்னது சாந்தி , திருப்பாவை சாந்தி , பாபு போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.2002 ஆம் ஆண்டு வெளியான ‘காதல் அழிவதில்லை’ என்ற படத்தில் ஹீரோவாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.இவர் தமிழில் கோவில் ,குத்து ,மன்மதன் ,வல்லவன் ,ஒஸ்தி, சிலம்பாட்டம், வாலு, ஈஸ்வரன், மாநாடு ,வெந்து தணிந்தது காடு,10 தலை, போன்ற படங்களில் நடித்துள்ளார்.
நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் போன்ற பன்முக திறமைகளை கொண்டவர்.நடிகர் சிலம்பரசன் தமிழ்த் திரையுலகில் பின்னணிப் பாடகராக அடிக்கடி பாடியுள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பத்து தலை. இப்படமானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
தற்போது நடிகர் சிம்பு பற்றி வலைப்பேசி அந்தணன் நடிகர் ஒரு மீடியாவில் பேசியுள்ளார். அதில் அவர் தனக்கான ஒரு மேனேஜரை வைத்துக் கொள்ள வேண்டும். அம்மாவை மேனேஜராக வைப்பது தவறு என்று கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.