
சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாம் புயல் ஓய்ந்து மூன்று நாட்கள் கடந்த பிறகும் தற்போது வரை அதன் தாக்கம் குறைந்தபாடில்லை. மக்கள் தங்குவதற்கு இடமின்றி உணவின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். பல இடங்களில் தேங்கி கிடக்கும் தண்ணீர் குறையவில்லை. இந்நிலையில், மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்துக் கொண்டிருக்க, சமூக விரோதிகள் சிலர் எண்ணூருக்கு அருகில் தேங்கி கிடக்கும் தண்ணீரில் வேதிபொருளை கலந்திருக்கிறார்கள்.
எண்ணூர் cpcl அருகே இந்த கொடுரம்.. இந்த oil நம் பார்வையில் படுவதால் தெரிகிறது.. ஆனால் இந்த மாதிரி நிலைமையை பயன்படுத்தி காற்றில் விஷவாயுக்களையும் கலந்து விட்டுள்ளனர்.. இந்த பக்கம் ஒரு முறை வந்து சுவாசித்து பார்த்தால் புரியும்.. வாழ்த்துகள் இந்த விஜய் மக்கள் இயக்க நண்பர்களுக்கு.. pic.twitter.com/EWukIUcWwT
— Mohan G Kshatriyan (@mohandreamer) December 7, 2023
விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு இந்த தகவல் தெரிய வந்திருக்கிறது. உடனே, அவர்கள் நேரடியாக களத்தில் இறங்கி உதவி அளித்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் வைரலாகும் அந்த வீடியோவை பார்ப்போர், மனிதர்கள் இப்படியும் இருப்பார்களா? கொடுமையான நிகழ்வு என்று திட்டி வருகிறார்கள். விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு வாழ்த்துக்கள் என்றும் கூறி வருகிறார்கள்.