இரவு முழுக்க கொட்டி தீர்க்கும் மழை… வேடிக்கை பார்க்க வந்த முதலை… மிரண்டு போன மக்கள்… வைரலாகும் வீடியோ…!

சென்னையில் இரவு முழுவதும் மழை கொட்டி தீர்த்துக் கொண்டிருக்கும் நிலையில், சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஒருபுறம் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. கடும் சிரமங்களை சந்தித்து தான் மக்கள் சாலையில் சென்று கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், பெருங்களத்தூர்-நெடுங்குன்றம் சாலையில் இருக்கும் வேலம்மாள் பள்ளியின் அருகே சாலையில் ஒரு முதலை அசால்ட்டாக சென்று கொண்டிருக்கிறது. சாலையில் சென்றவர்கள் அதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.