எல்லாரும் கை விரிச்சிட்டாங்க.. பிரபல இயக்குனருக்கு கைக்கொடுத்த சண்முக பாண்டியன்.. வெளியான மாஸ் தகவல்..!

இயக்குனர் பொன்ராம், நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா ஆகிய படங்களை இயக்கி பிரபலமானவர். தற்போது இவர் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனை வைத்து ஒரு திரைப்படம் இயக்க உள்ளதாக வலைப்பேச்சு சக்திவேல் தகவல் வெளியிட்டுள்ளார்.

   

அவர் தெரிவிப்பதாவது, இயக்குனர் பொன்ராம் கடைசியாக நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய டிஎஸ்பி என்ற திரைப்படம் தோல்வியை சந்தித்தது. அதனை தொடர்ந்து ஒரு கதையுடன் பல நடிகர்களை சந்தித்து இருக்கிறார். யாரிடமும் கால்ஷீட் இல்லாததால் கடைசியாக விஜய் சேதுபதியிடம் சென்றுள்ளார்.

அவர், இயக்குனர் வெற்றிமாறனிடம் ஒரு கதை இருக்கிறது. அந்த கதையை வைத்து இயக்குங்கள். நான் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால், அந்த திரைப்படம் குறித்து  எந்தவித தகவலும் வெளிவரவில்லை. எனவே, இயக்குனர் பொன்ராம் நடிகர் சூரியை சந்தித்துள்ளார்.

அவரிடமும், கால்சீட் இல்லாததால், இறுதியாக சண்முக பாண்டியனை நடிக்க வைக்க முடிவெடுத்துள்ளார். அவர் கதைக்கு ஓகே சொல்லிவிட்டார். எனவே, தற்போது சண்முக பாண்டியனை வைத்து பொன்ராம், படம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது என்று சக்திவேல் கூறியுள்ளார்.