தந்தை சூர்யா வழியில் மகன் தேவ்வும் சினிமாவில் ஜோதிகாவின் ரியாக்ஷன் என்ன தெரியுமா?..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை தான் நடிகை ஜோதிகா. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், ரஜினி, விஜய், கமல், விக்ரம், சிம்பு போன்ற  நடிகர்களுடன் இணைந்து பல படங்களில்  நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு , மலையாளம், ஹிந்தி போன்றபடங்களிலும் நடித்துள்ளார்.

   

நடிகை ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு பிரேக் கொடுத்துவிட்டு தன் குடும்பத்தை மற்றும் கவனித்து வந்தார்.அதன்  பிறகு நீண்ட இடை வெளிக்கு பிறகு  36 வயதினிலே திரைப்படத்தின் மூலமாக ரீ என்ட்ரி  கொடுத்தார். அதைத் தொடர்ந்து ராட்சசி, மகளிர் மட்டும், உடன்பிறப்பே,காதல் தி கோர்,  சைத்தான் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஆங்கில சேனல் ஒன்று இருக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ஜோதிகாவிடம் உங்கள் மகன் தேவ் சினிமாவில் நடிப்பாரா?. என்று தொகுப்பாளர் கேட்க அதற்கு அவர் நிச்சயமாக வாய்ப்பில்லை எட்டாம் வகுப்பு தான் படித்து வருகிறார். என் மகள், மகன் இருவருக்குமே படிப்பின் மீது ஆர்வமாக இருக்கிறார்கள். ஒரு வேலை படிப்பு முடிந்ததும் நடிக்க வேண்டும் என்று விரும்பினால் அவர்கள் விருப்பம் தான் என்று கூறியுள்ளார்.