திடீரென்று மேடையில் கண்கலங்கிய நடிகை சமந்தா… ஓ இது தான் காரணமா?

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை தான் நடிகை சமந்தா. இவர் சென்னை பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்தார். இவர் ஆரம்ப காலகட்டத்தில் கடைகளில் வெல்கம் கேர்ளாக  பணியாற்றியுள்ளார். அதைத் தொடர்ந்து இவர் காவேரி என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

   

அதைத் தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா?, நான் ஈ போன்ற படங்களில் நடித்து  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார். நீ தானே என் பொன்வசந்தம் ,கத்தி, தெறி, சூப்பர் டீலக்ஸ் ,என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார் .தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை  காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு படத்தை கைவிடாமல் படத்தில் நடித்து வந்தார்.பிறகு  இருவரின் கருத்து வேறுபாடு காரணமாக  விவாகரத்து செய்து கொண்டனர். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த  படம் குஷி. அதை தொடர்ந்து  ‘சிட்டாடல்’  படத்தில்  நடித்து வருகிறார்.இவர் சமீபத்தில் நடந்த ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில்  நடுவராக  கலந்துகொண்டார்.  அந்த நிகழ்ச்சியில் Gravity என்ற ஹிப் ஹாப் பாடகர் ‘ஜலாலுதீன்’ எனும் பாடலை பாடினார்.

அந்த பாடலை கேட்டவுடன் கண் கலங்கி அழுது விட்டார் நடிகை சமந்தா. இந்த பாடலை கேட்டு சமந்தா ஏன் அழுதார் என பலருக்கும் கேள்வி எழுப்பினர். அதற்கான காரணம் நடிகை சமந்தா  நோயால்  பாதிக்கப்பட்டு இருந்த போது அவருக்கு மோட்டிவேஷன் கொடுத்த பாடல் இது தான், அதனால், இந்த பாடலை கேட்டவுடன் திடீரென கண்கலங்கி அழுதுவிட்டார் என இந்த வீடியோவை ஹிப் ஹாப் பாடகர் Gravity தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.