CSK வீரருடன் காதல்.. ஜாலியாக இருந்தது.. ஓபன் டாக் செய்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை இனியா..

விஜய் டிவி சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியலட்சுமி மகளாக இனிய கதாபாத்திரத்தில் நடிப்பவர்தான் நடிகை நேஹா. இவர் கேரளாவை சேர்ந்தவர். இவர் பல தொடர்களில் பள்ளி மாணவியாகவும் நடித்திருக்கிறார். இந்நிலையில் கடந்த வருடம் CSK அணிக்காக விளையாடி வரும் இலங்கை வீரர் பத்திரனா உடன் நேஹா காதலில் இருப்பதாக செய்தி பரவியது.இந்நிலையில்  இதைப்பற்றி ஒரு பேட்டியில் நேகாவிடம் கேட்டதற்கு,

   

எனக்கு கிரிக்கெட் பார்க்கவே தெரியாது யாராவது அருகில் கமெண்ட் கொடுத்து சொல்லிக் கொடுத்தால் பார்ப்பேன். ஒருமுறை செட்டில் அருகில் இருந்தவர் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது பத்திரனா பற்றி கூறினார். அவரின் instagram status போட்டதை நான் ஷேர் செய்திருந்தேன்.

அந்த பதிவுக்குப் பிறகு பத்திரனா காதலிப்பதாக கிசுகிசு வந்தது எனக்கும் ஜாலியாக இருந்ததால் விட்டுவிட்டேன். ஆனால் பத்திரனாவை நேரில் கூட பார்த்ததில்லை என்று கூறியுள்ளார். மேலும் அவர் நிஜ வாழ்க்கையில் நான் ஒரு காதல் தோல்வியை சந்தித்தேன் அதனால் வருத்தத்தில் கண்ணீர் விட்டு அழுததாகவும் கூறியிருந்தார். காதல் தோல்விக்கு  காரணம் என்ன என்பதை  பேட்டியில் வெளிப்படையாக சொன்னால் என் அம்மா பார்த்துவிட்டு உதைப்பார்கள்  என நேஹா கூறியுள்ளார் .