பளாரென கன்னத்தில் அறைந்த மூர்த்தி… ‘என்னை ஏன் இப்படி அசிங்கப்படுத்துறீங்க’ கதறி அழுத ஜீவா… பிரியுமா ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம்…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. இந்த சீரியல் தற்போது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு நாளும் புது கதை களத்துடன் இயக்குனரும் கதையை நகர்த்திச் சென்று கொண்டுள்ளார். இந்நிலையில் இன்றைய நாளின் எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை இங்கு நாம் காண்போம்.

   

இதற்கு முந்தைய எபிசோடில் மீனாவின் அப்பா தனது மகளிடம் சென்று மொய் லிஸ்டை காண்பித்து ‘மாப்பிள்ளை பெயரும் உன் பெயர் மட்டும் தான் இல்ல’ என்று கோபத்தில் கத்துகிறார். உடனே அந்த லிஸ்ட்டை வாங்கிக் கொண்டு சென்ற மீனா, ‘ஜீவாவிடம் இந்த மொய் லிஸ்டில் உன்னுடைய பெயரும் என்னுடைய பெயரும் தவிர்த்து நம்ம வீட்டில் இருக்கும் எல்லோத்தோட பெயரும் இருக்கு’ என்று கோபப்படுகிறார்.

இதன் தொடர்ச்சியாக இன்று எபிசோடில் ‘அந்த லிஸ்ட்டை வாங்கிக்கொண்டு, கோபமாக வந்த ஜீவா மூர்த்தியிடம் கேள்விகள் கேட்க தொடங்குகிறார். ‘என்ன காயப்படுத்தி ரசிக்குறதுல  ரசிகர்கள் உங்களுக்கு என்ன அப்படி ஆனந்தம்?’ என கேட்க, கதிர் இடையில் புகுந்து ‘என்ன அண்ணா இப்படி பேசுற’ என்று கேட்கின்றார். அதற்கு கோபமடைந்த ஜீவா ‘நான் உங்கிட்ட பேசல. அண்ணன் கிட்ட பேச உன்கிட்ட பர்மிஷன் வாங்கணுமா?’ என கேட்கின்றார்.

‘ஏன் ஜீவா இப்படி ஒரு மார்க்கமாக பேசுற?’ என்ன மூர்த்தி கேட்கிறார். ‘என்ன ஏன் இந்த மோய் லிஸ்டுல விட்டுட்டீங்க?’ என கண்கலங்கி அழுகின்றார் ஜீவா. என்ன மட்டும் ஏன் விட்டீங்க? என கேள்வியும் கேட்கிறார். இதற்கிடையில் கதிரும் முல்லையும் அவர்களுக்குள் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கண்ணன் செய்த வேலைக்கு பளார் என கன்னத்தில் அறைந்து விடுகின்றார் மூர்த்தி.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தார் என எழுத தானே சொன்னேன்’ என திட்டியும் விடுகிறார். இவ்வாறு இவர்களுக்குள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது மீனாவின் அப்பா அவருடைய பங்கிற்கு ‘நடிக்காத மூர்த்தி, நீதான அப்படி எழுத சொன்ன’ என எரியுற தீயில் எண்ணை ஊற்றுகிறார். ஆனால் தனமோ ‘அப்படி இல்ல சித்தப்பா’ என சமாளிக்கிறார். இத்துடன் இன்றைய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எபிசோட் முடிவடைந்துள்ளது.