‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் தலைமையில் நடந்த ரசிகரின் திருமணம்… வைரலாகும் க்யூட் புகைப்படங்கள் இதோ…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. தற்பொழுது கோலிவுட்டின் படுபிஸியான நடிகர் என்று யாரைக்கேட்டாலும் நடிகர் விஜய் சேதுபதியின் பெயரை தான் சொல்வார்கள். அந்த அளவுக்கு பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஹீரோ தான் என்று இல்லாமல் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் துணிந்து நடிப்பதால் அவர் கை நிறைய படங்கள் இருக்கிறது.

   

இவர் தனது ரசிகர்களால் அன்போடு ‘மக்கள் செல்வன்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் நடிப்பில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று, சுந்தரபாண்டியன் போன்ற படங்களில் இவர் நடிப்பு அவ்வளவாக மக்கள் மத்தியில் அறியப்படவில்லை.

ஆனால் தற்பொழுது இவர் தனது நடிப்பு திறமையால் அசுர வளர்ச்சி அடைந்துள்ளார். இவர் தற்பொழுது அதிகமாக வில்லன் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

எனினும் அவ்வப்போது ரொமான்டிக் ஹீரோவாகவும் அசத்தி வருகிறார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான ‘மாமனிதன்’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் டிஎஸ்பி. இத்திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்துள்ளது.

ஆனால் இந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த விக்ரம், காத்து வாக்கு ரெண்டு காதல் போன்ற  திரைப்படங்கள் வெற்றிகரமான படங்களாக அமைந்துள்ளது.

இவர் தற்பொழுது வில்லன் மற்றும் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு ,ஹிந்தி போன்ற பல மொழி திரைப்படங்களிலும் கால் பதித்து நடித்து அசத்தி வருகிறார்.

இவர் தற்பொழுது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா உடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமின்றி காந்தி டாக்ஸ், விடுதலை போன்ற பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தலைமையில் அவருடைய ரசிகரின் திருமணம் ஒன்று நடந்துள்ளது.

நடிகர் விஜய் சேதுபதியின் தலைமையில் நடந்த முதல் திருமணம் இதுதான். ரசிகரின் திருமண நிகழ்விற்கு தனது மனைவியுடன் சென்ற விஜய் சேதுபதி, ஆசிர்வாதம் செய்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.