விபத்தில் சிக்கிய ‘கட்சி சேர’ பாடல் நடிகை சம்யுக்தா.. அதிர்சியில் ரசிகர்கள்

சமீபத்தில் சோசியல் மீடியாவில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் மிகவும் வைரலான பாடல் தான் ‘கட்சி சேர’ இப்பாடலை இயக்குனர் கென் ராய்ஸ்சன்  இயற்றியுள்ளார். இப்பாடலுக்கு இசையமைப்பாளர் பாடகர் திப்பு மற்றும் ஹரிணி தம்பதியின் மகனான சாய் அபயங்கர் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார்.  இப்பாடல் பாடல் சம்யுக்தாவின் டான்ஸ் மூவ்ஸ் அனைவராலும் ரசிக்கப்பட்டது.இப்பாடல் ஆனது youtube, இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைதளங்களிலும் சம்யுக்தா வைரலானார்.

   

 

 

இதைத்தொடர்ந்து இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சம்யுக்தா விபத்து ஒன்றில் சிக்கி தான் காயமடைந்திருப்பதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தன.ர் இந்த புகைப்படத்துடன் ஒரு TAG கையும் வெளியிட்டுள்ளார். அதில்  என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் என்னுடைய வெற்றிகளை மட்டும் பிரதிபலிக்கும் ஒன்றாக இருப்பதை நான் விரும்பவில்லை .

அதில் என்னுடைய வாழ்க்கையில் நிகழும் அனைத்து தருணங்களையும் இருக்க வேண்டும்  என்பதை நான் விரும்புகிறேன். இந்த பிரபஞ்சம் நான் சிறிதும்  நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எனக்கு நிறைய நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கிறது. முதலில் கால் தசையில் காயம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து கெண்டைக்காலில் சுளுக்கு தற்போது மூக்கில் ஒரு சிறிய காயம் ஏற்பட்டிருக்கிறது. சினிமா தொழிலில் இருக்கும் ஒருவருக்கு மூக்கில் காயம் என்பது எவ்வளவு மன அழுத்தத்தை தரக்கூடியது என்பதை கற்பனை செய்து பாருங்கள்.

 

கொஞ்சம் ரத்தம், கொஞ்சம் வலி,ஒரு சில ஊசிகள், நிறைய மாத்திரைகள்  எடுத்துக் கொள்கின்றேன். வலியை தாங்கும் சக்தி எனக்கு அதிகம் என்பதால் நான் இதை சமாளித்து விட்டேன். இப்போது நான் ஒரு அளவிற்கு நன்றாக இருக்கிறேன் .ஒரு சில ப்ராஜெக்ட்களில் நடிக்கும் வாய்ப்பினை இழந்து விட்டேன். ஆனால் அது பரவாயில்லை வாழ்க்கையில் சில நல்ல தருணங்கள் சில கெட்ட தருணங்களும் இருக்கத் தான் செய்கின்றனர்  ஒவ்வொரு முறையும் கற்றுக்கொண்டு கொஞ்சம் ஓய்வு எடுத்து மறுபடியும் வேலையை திரும்ப செய்வதுதான் வழக்கம்.

எப்போதும் பெரிதும் பார பட்சம் காட்டாத என் பூனை நான் எப்போதெல்லாம் சோர்வாக இருக்கிறேனோ அப்போதெல்லாம் என் பக்கத்தில் இருக்கிறது அது எனக்கு காட்டும் அன்பை அனுபவித்துக் கொண்டே இருக்கப் போகிறேன். உங்கள் வாழ்க்கையில் ஒருநாள் கஷ்டமான சூழ்நிலை கடந்து கொண்டிருப்பீர்கள் என்றால் நீங்கள் தனியாக இல்லை என்பதை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.