வாவ்.. செம கியூட்… கணவர் மற்றும் குழந்தைகளுடன் இணைந்து அழகான தருணங்களை பகிர்ந்த நடிகை சினேகா… வைரலாகும் வீடியோ இதோ…

நடிகை சினேகா தற்பொழுது இணையத்தில் தன் குடும்பத்தோடு இணைந்து இருந்த அழகான தருணங்களை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சினேகா. தமிழில் இவர் ‘என்னவளே’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், புன்னகை தேசம், விரும்புகிறேன், ஏப்ரல் மாதத்தில், ஆட்டோகிராப், வசூல்ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

   

தமிழை தாண்டி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டாமல் குடும்ப பாங்காகவே நடித்து ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்துள்ளார். தமிழில் இவர் கடைசியாக நடித்த திரைப்படம் ‘பட்டாசு’. இத்திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் இத்திரைப்படம் படுதோல்வி அடைந்தது.

தற்பொழுது இவர் ‘கிறிஸ்டோபர்’ என்ற மலையாள திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். நடிப்பு மட்டும் இல்லாமல் பல ரியாலிட்டி ஷோக்கலில் நடுவராகவும் பங்கு பெற்று வருகிறார் அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் டான்ஸ் vs  டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராகவும், இதை தொடர்ந்து தற்பொழுது தெலுங்கில் ரியாலிட்டி சோவிற்கு நடுவராகவும் இருந்து வருகிறார் நடிகை சினேகா.

தனக்கென ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ள சினேகா, நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துக்கொண்டு குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை சினேகா. இவர் அவ்வப்பொழுது ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதாவது இவர் புத்தாண்டை முன்னிட்டு துபாய்க்கு தனது குடும்பத்துடன் சென்று கொண்டாடிய அழகான தருணங்களை வீடியோவாக பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Sneha (@realactress_sneha)