இந்த குழந்தையை பார்த்தாவது கத்துக்கோங்க…. பல கோடி மக்களின் மனதை கொள்ளை கொண்ட குழந்தையின் செயல்…. வைரல் வீடியோ….!!!

சிறு குழந்தை ஒன்று தன்னிடம் உணவு கேட்டவருக்கு கைநிறைய அள்ளிக் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இணையத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றது. பல வீடியோக்கள் நம்மை சிரிக்க வைப்பதற்கு, நம்மை மகிழ்விப்பதற்கு இருக்கின்றது, நம் கவலைகளை மறந்து இந்த வீடியோவை பார்க்கும் போது நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.

   

இணையதளங்கள் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து கொண்டே உள்ளது. அவற்றிற்கு ஏற்ப மக்களும் தங்களை முன்னேற்றிக் கொண்டு வருகின்றனர். இணையத்தில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. ஒரு பள்ளி செல்லும் குழந்தை யூனிபார்ம் பேக் உடன் அமர்ந்து கொண்டு கையில் ஒரு சிப்ஸ் பாக்கெட்டை வைத்து அதை எடுத்து சாப்பிட்டுக் கொண்டுள்ளது.

அப்போது அங்கு வந்த ஒரு நபர் அந்த குழந்தையிடம் சென்று தனக்கு கொஞ்சம் கொடு என்று கேட்க அந்த குழந்தை அவரை பார்த்துவிட்டு அந்த சிப்ஸ் பாக்கெட்டுக்குள் இருந்து கை நிறைய அள்ளி அவருக்கு கொடுக்க வருகின்றது. பின்னர் அவர் அதை வேண்டாம் என்று மறுத்துவிட்டார். அந்தக் குழந்தையின் செயல் அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோ இதோ உங்களுக்காக….