![lokesh (17)](https://awakeindiapac.com/wp-content/uploads/2023/09/lokesh-17-1.jpg)
நடிகை அபிராமி
90ஸ்களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை அபிராமி. இவர் தமிழ் சினிமாவில் வானவில் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் இவர் பல ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்து வந்தார் என்று கூறப்படுகிறது. கமலுடன் நடித்த விரும்மாண்டி படத்திற்கு பின் இவர் சினிமாவை விட்டு விலகினார். பின்னர் திருமணம் செய்து கணவருடன் செட்டிலாகினார் எனவும் இதற்கு காரணம் கமல் கொடுத்த டார்ச்சர் தான் எனவும் பல விமர்சகர்கள் கூறி வந்தனர்.
இதனையடுத்து அபிராமி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் பங்கேற்று வருகிறார். அண்மையில் இவர் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் அவரின் 50வது படமான மகாராஜா என்ற படத்தில் நடித்துள்ளார். சில நாள்களுக்கு முன் அபிராமி அளித்த பேட்டியில், எப்படி விருமாண்டி படத்தில் என்னை தேர்வு செய்தார் என்பதை பற்றி கூறியுள்ளார்.
அப்போது மதுரை ஜல்லிக்கட்டு சமயத்தில், கண்ணாடி போட்டு கம்பீரமாக உட்கார்ந்திருந்த என்னை கமல் சார் பார்த்துள்ளார். பின் இந்த கதைக்கு இந்த பெண் கரக்ட்டாக இருக்கும் என நினைத்து தான் என்னை தேர்வு செய்தார் என்று கமல் தன்னிடம் முன்பு கூறியுள்ளதாக அபிராமி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும் அனைத்து நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை. அவர், இவர் என அப்படி எல்லாம் இல்லை, எனக்கு இந்த விசயத்தில் பேராசைதான் எனவும் தெரிவித்துள்ளார், அபிராமி. எனக்கு கல்லூரியில் காதல் கடிதம் வந்ததே தவிர சினிமாவில் இல்லை எனவும் நடிகை அபிராமி கூறியுள்ளார்.