![Web_Photo_Editor (5)](https://awakeindiapac.com/wp-content/uploads/2023/08/Web_Photo_Editor-5.jpg)
நடிகை கிரண்
தமிழ் சினிமாவில் நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் ஹீரோனியாக அறிமுகமானவர் நடிகை கிரண். இப்படத்தில் கிடைத்த நல்ல வரவேற்புக்கு பின் அஜித்தின் வில்லன், பிரசாந்தின் வின்னர், கமலின் அன்பே சிவம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து, 90ஸ் களின் கனவுக்கன்னியாக வலம் வந்தார். அதன்பின் இவரின் உடல் எடை அதிகரித்ததால் ஆண்டி ரோல் கதாநாயகியாக, சில படங்களில் நடித்து வந்தார்.
பேட்டி
தற்போது பட வாய்ப்பில்லாமல் சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருந்து பலான நடிகையாக திகழ்ந்து வரும் கிரண், அண்மையில் பேட்டியொன்றில் அவரை பற்றிய விசயம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது தனக்கு பட வாய்ப்பு கிடைக்காமல் போவதற்கு மற்றும் திருமணம் செய்யாமல் இருப்பதற்கான காரணத்தை பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
அப்போது என் வாழ்க்கையே ஒரு தவறான முடிவால் தான் வீணாகிவிட்டது என்றும் பல படங்களில் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில், ஒருவரை நான் காதலித்து தவறான முடிவை எடுத்துவிட்டேன். அதனால் பல வாய்ப்புகளை இழந்தேன். பின்னர் காதல் தோல்வியால் மிகவும் கஷ்டப்பட்டு மீண்டு வந்தேன் என்று தெரிவித்துள்ளார். நான் அப்போது காதல், கல்யாணம் என்று வாழ ஆசைப்பட்டேன், ஆனால் தவறான நபரால் இப்போது இந்த நிலைமை.
மேலும் அந்த நபரை காதலிக்காமல் இருந்திருந்தால், இப்போது மிகப்பெரிய கதாநாயகியாகி இருப்பேன் என்றும் பைத்தியக்காரத்தனமாக நான் செய்த அந்த தவறு தான், என் வாழ்க்கையே தலைகீழாக மாற்றி நாசமாக்கிவிட்டது. எனவே இப்போது நடிக்க ஆசைப்படுவதாகவும், வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன். இவ்வாறு நடிகை கிரண் அதில் கூறியுள்ளார்.