தனது மகன் மற்றும் பேரக்குழந்தைகளுடன் நடிகர் பாண்டியராஜ்…. அழகான குடும்ப புகைப்படங்கள்…!!!

தமிழ் சினிமாவில் மிகவும் புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் பாண்டியராஜன், சென்னையை சேர்ந்த இவர் பல முயற்சிக்குப் பிறகு சினிமாவில் அறிமுகமானார்.

   

பாண்டியராஜன் என்று சொன்னாலே நமக்கு ஞாபகத்துக்கு வருவது அவருடைய திருட்டு முழியும், வெள்ளந்தியான பேச்சும் தான்.

இவர் முதன் முதலாக பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். பின்னர் 23 வயதில் இயக்குனராக பிரபலமானார்.

இவர் திரைப்பட இயக்குனர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் பாண்டியராஜன். முதன் முதலாக கன்னி ராசி என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் இயக்குனராக அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து ஆண்பாவம், மனைவி ரெடி, கபடி கபடி 10 படங்களுக்கு மேல் இயக்கியிருக்கிறார். தொடர்ந்து படங்களில் ஹீரோவாக நடித்து வந்த இவர் பின்னர் குணச்சித்திர கதாபாத்திரங்களின் நடிக்க தொடங்கி விட்டார்.

இவர் 1986 ஆம் ஆண்டு வாசுகி என்பவரை திருமணம் செய்து கொண்டிருந்தார். அன்றைய காலத்தில் இயக்குனராக, தயாரிப்பாளராக, பாடல் ஆசிரியராக வளம் வந்த அவிநாசி மணியின் மகள் இவர்.

இவருக்கு பல்லவராயன், பிரித்திவிராஜன், பிரேம் ராஜன் என்று மூன்று மகன்கள் இருக்கிறார்கள். அவ்வப்போது தனது குடும்பத்துடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை அவர் வெளியிட்டு வருவார்.

அந்த வகையில் தற்போது பாண்டியராஜ் தன்னுடைய மனைவி, மகன்கள், பேரக்குழந்தையுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இதோ…