‘மொழி’ திரைப்பட நடிகர் பிரித்விராஜின் மனைவி மற்றும் மகளைப் பார்த்துள்ளீர்களா?..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் பிரத்விராஜ். இவர் அக்டோபர் 17ஆம் தேதி 1982 ஆம் ஆண்டு பிறந்தார்.

   

இவர் கேரளா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். தந்தை சுகுமாரன் ஒரு நடிகர் , தாய் மல்லிகா சுகுமாரன் ஒரு நடிகை.

இவருக்கு ஒரு சகோதரரும் உள்ளார். இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான ‘நந்தனம்’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார்.

அதைத்தொடர்ந்து புதிய முகம், போக்கிரி ராஜா, அன்வர், உருமி உள்ளிட்ட மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.2006 ஆம் ஆண்டு சிறந்த  நடிகருக்கான கேரளா மாநில திரைப்பட விருதை வென்றார்.

2005 ஆம் ஆண்டு ‘கனா கண்டேன்’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு வெளியான ‘பாரிஜாதம்’ என்ற படத்தின் மூலமா மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான ‘மொழி’ படத்தின் மூலமாக தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

இவர் தமிழில்  கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும், உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

2010 ஆம் ஆண்டு  மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘ராவணன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து வசந்த பாலன் இயக்கத்தில்  வெளியான ‘காவிய தலைவன்’ என்ற திரைப்படத்தில் நடிகர் சித்தார்த்துடன் இணைந்து நடித்துள்ளார்.

இவர் 2010 ஆம் ஆண்டு ‘போலீஸ் போலீஸ்’என்ற திரைப்படத்தின் மூலமாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.

2018 ஆம் ஆண்டு வெளியான  ‘ஐய்யா’ என்ற திரைப்படத்தின் மூலமாக இந்தி  திரையுலகில் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து ‘அவுரங்கசீப்’ என்ற திரைப்படத்திலும் நடித்தார். இப்படத்தில் இவருடன் சேர்ந்த அர்ஜுன் கபூர் நடித்துள்ளார்.

இவர் தமிழ், தெலுங்கு ,மலையாளம், இந்தி போன்ற பலமொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் நடிகர் மட்டுமல்ல தயாரிப்பாளரும் கூட ஆகஸ்ட் சினிமா என்ற பெயரில் ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை  நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனத்தின் மூலமாக உருமி ,இந்திய ரூபாய், கடல் கடன்னு ஒரு மாதுகுட்டி, டபுள் பேரல் போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

இவர் நடிகர் மட்டுமல்ல பின்னணி பாடகர் ,தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டுள்ளார்.

நடிகர் பிரத்விராஜ் சுப்ரியா என்பவரை 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.  சுப்ரியா பிபிசி இந்தியா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார்.

இவர்களுக்கு அலங்கி ரிதா என்ற ஒரு மகள் உள்ளார்.தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.