
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரின் மூலம் மிகப் பிரபலமானவர் சீரியல் நடிகை ரக்ஷிதா. இதை தொடர்ந்து இவர், ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என பல சீரியல்களில் நடித்துள்ளார். இவர் தன்னுடன் இணைந்து நடித்த சக சீரியல் நடிகரான தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மன வேறுபாடு காரணமாக, தற்பொழுது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ரட்சிதா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 6 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமாகி உள்ளார்.

நடிகர் தினேஷ் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்டு, அண்மையில் ரச்சிதாவை பிரிந்த சோகங்களை பற்றியும் அதில் பேசியிருப்பார்.
இந்நிலையில் தற்போது ரட்சிதாவின் இன்ஸ்டா பக்கத்தில் மன அமைதிக்காக சிவன் கோவிலில் வைத்து தியானம் செய்யும் வீடியோ ஆனது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ
View this post on Instagram