![708bdc6c-af71-4216-8c5f-23fed7269623](https://awakeindiapac.com/wp-content/uploads/2023/09/708bdc6c-af71-4216-8c5f-23fed7269623.png)
நடிகை ஷாலு ஷம்மு
தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்து, அறிமுகமானவர் நடிகை ஷாலு ஷம்மு. இந்த படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்தின் கிடைத்த வெற்றியால், இவர் பிரபலமானார். இதனையடுத்து இவர் தெகிடி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் என போன்ற பல படங்களில் சிறுசிறு ரோலில் நடித்தார்.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் ஷம்மு பேசியுள்ளதவது, “ ஒரு படத்தில் நடிக்க என்னை அணுகி, கேரக்டர் பற்றி பேச கூப்பிட்டார். ஆனால் பேச வரும் போது சேலை உடுத்தி வரச் சொன்னார் எனவும் நல்ல வாய்ப்பு கிடைக்கும் என எண்ணி மகிழ்ச்சியுடன் சொன்ன முகவரிக்கு சென்றேன் எனவும் கூறினார்.
அட்ஜெஸ்ட்மெண்ட்
பின்னர் அங்கு சென்றதும், அவரின் குடும்ப புகைப்படத்தை பார்த்தபோது, தான் அது அவரது வீடு என தெரிந்தது. பின் வீட்டில் உள்ளவர்கள் எங்கே போனார்கள் என கேட்டதற்கு, அவர்கள் அனைவரும் வெளிநாடு சென்றுள்ளதாக சொன்னதை நானும் நம்பினேன். பின்னர் அவர் எனக்கு ஒரு கிளாஸ் ஜூஸ் கொடுத்து குடிக்க சொன்னார்.
நானும் அதைக் குடித்தேன். பிறகு அவர் கேரக்டரைப் பற்றி பேசுவதை விட மற்ற விஷயங்களைப் பற்றி அதிகம் பேசியதால், என்னவோ தப்பாக இருப்பது தெரிந்து பயத்தில் எனக்கு வியர்க்க ஆரம்பித்தது. உடனே இதைப் பார்த்த இயக்குநர் தன்னை படுக்கையறைக்கு அழைத்து, அங்கே ஏசி இருக்கிறது வா என்று அழைத்தார். பின்பு நான் பயந்து போய் அங்கிருந்து ஓடி வந்துவிட்டேன்“. மேலும் அந்த விஜய் தேவரகொண்டா பட இயக்குநர் மீது புகார் கொடுத்துள்ளேன். இவ்வாறு நடிகை ஷாலு அந்த பேட்டியில் கூறியுள்ளார்.