‘விவாகரத்து பிறகு வேறு ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன்’… பிரபல நடிகை ஓபன் டாக்… ரசிகர்கள் ஷாக்…

1970 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை லட்சுமி. இவருடைய மகள்தான் பிரபல நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன். தன்னுடைய அம்மாவை போலவே திரையுலகை தேர்வு செய்து 1989ல் தெலுங்கு திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார்.

   

இதைத்தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாள படங்களை தேர்வு செய்து நடித்த இவரை, தமிழில் ‘நியாயங்கள் ஜெயிக்கும்’ என்ற படத்தின் மூலம் இயக்குனர் சிவச்சந்திரன் அறிமுகப்படுத்தினார்.

இதை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன்.  ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘எஜமான்’ திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் இவருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது.

இதை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் கவனம் செலுத்தினார் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன். இவர் ஹீரோயின் ஆக மட்டுமின்றி குணச்சித்திர கதாபாத்திரங்களையும்  தேர்வு செய்து நடிக்க தொடங்கினார்.

தற்பொழுது வரை பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். இவர் சமீபத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான யானை திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் 1994ல் தன்வீர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதை தொடர்ந்து இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். தற்பொழுது தன்வீர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் சமீபத்தில் பங்கேற்ற பேட்டி ஒன்றில் தனது  திருமண வாழ்க்கை குறித்து கூறியுள்ளார். அதில் அவர், ‘என் முன்னாள் கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதில் எனக்கு வருத்தமில்லை.

‘அதேபோல நானும் விவாகரத்து செய்த பிறகு வேறு ஒருவருடன்  ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். ஆனால் அது குறுகிய காலத்திலேயே முடிந்துவிட்டது’ என்று கூறியுள்ளார். தற்பொழுது இவரின் பேட்டியை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.