பிரபல முன்னணி நடிகை நயன்தாராவின் யாரும் பார்த்திராத புகைப்படம் இதோ…

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை நயன்தாரா. இவர் இயற்பெயர் டயானா மரியா குரியன்.

   

சினிமாவிற்காக தன் இவர் நவம்பர் 18ஆம் தேதி 1984 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பெங்களூரை பூர்வீகமாக கொண்டவர்.

இவரது தந்தை இந்திய விமானப்படை அதிகாரியாக இருந்ததால் , நயன்தாரா இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் படித்தார்.

இவர் தனது பள்ளிப்படிப்பை ஜாம்நகர் , குஜராத் மற்றும் டெல்லியில் படித்தார்.இவர் English literature இளங்கலைப் பட்டத்திற்காக திருவல்லாவில் உள்ள மார்த்தோமா கல்லூரியில் பயின்றார்.

இவர் கல்லூரி படிக்கும் போதே மாடலாக பகுதி நேரம் வேலை பார்த்தார். அதன் மூலமாக இயக்குனர் சத்யன் அந்திக்கடால்  இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளியான ‘மனசினக்கரே’ திரைப்படத்தின் மூலமாக மலையாளத் திரையுலகில் அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு வெளியான’நாட்டுராஜாவு’ படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து  தெலுங்கு படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.

அதன் பிறகு 2005 ஆம் ஆண்டு வெளியான ‘ஐயா’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து ஐயா படப்பிடிப்பில் இருந்தபோது, நகைச்சுவை திகில் படமான சந்திரமுகி படத்தில் நடித்தார்.

இப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கியத்தில் வெளியான ‘கஜினி’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இவர் தமிழில் சிவாஜி,கஜினி,வல்லவன்,ஆரம்பம்,கோலமாவு கோகிலா, அறம் விசுவாசம்,

மிஸ்டர் லோக்கல் ,பிகில், தர்பார்,அண்ணாத்த போன்ற பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

2013 ஆம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்  பெற்றுக் கொண்டார்.

நடிகை நயன்தாரா அறம், மாயா, அனாமிகா, கோலமாவு கோகிலா, நெற்றிக்கண் போன்ற படங்களில் பெண்ணை மையமாகக் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

இவரை தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார்.

2015 ஆம் ஆண்டு வெளியான நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து பணியாற்றினார்.இதன் மூலம் இருவரும் காதலித்து 2022 ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் வாடகை தாய் மூலம் உயிர் ருத்ரோநீல் என் சிவன் மற்றும் உலக் டைவிக் என் சிவன் என்ற இரட்டைக் குழந்தைகள் உள்ளனர்.

தற்போது நயன்தாராவின் யாரும் பார்த்திராத புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.