காந்த கண்களால் ரசிகர்களை கிறங்கடித்த ‘செம்பருத்தி’ சீரியல் நடிகை… வைரலாகும் வீடியோ…

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2017ல் தொடங்கி சமீபத்தில் நிறைவடைந்த சூப்பர் ஹிட் சீரியல் செம்பருத்தி. இந்த சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஷபானா. இவருக்கு என்று சோசியல் மீடியாவில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

   

நடிகை ஷபானாவும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் ஆரியனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் கோலாகலமாக நடைபெற்ற நிலையில் இவர்களது திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. இதைத்தொடர்ந்து ரசிகர்களும்  தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தற்பொழுது இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் Mr. மனைவி சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமூகவலைத்தளங்களில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இணையத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்  ஷபானா.

இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது தனது காந்த கண்களால் ரசிகர்களை கவர்ந்திருக்கும் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த வைரல் வீடியோ….