இயற்கையான முறையில் சத்தான காய்கறிகளை வீட்டில் தோட்டம் வைத்து விளைச்சல் செய்யும் நடிகை சமந்தா… வைரலாகும் புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவில்  மிகவும் பிரபலமான  முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை சமந்தா. இவர் சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர்.

   

தி.நகரில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ – இந்திய மேல்நிலைப்பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார்.ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் Commerce இளங்கலைப் பட்டம் பெற்றார்.

இவர் கல்லூரியில் படிக்கும் போதே நாயுடு ஹாலில் விளம்பரகளில் நடித்தார்.கௌதம் மேனன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘ஏ மாய சேசாவே’ என்ற படத்தின் மூலமாக  தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார் .

இதன் பிறகு தமிழில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற படத்தில் சிறிய கதாபத்ரதில் நடித்த மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.பாணா காத்தாடி’ திரைப்படத்தில்  நடிகையாக நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார் .

இவர் தமிழில் தெறி, 24 ,10 எண்றதுக்குள்ள, தங்க மகன், கத்தி, நீ தானே என் பொன்வசந்தம், நான் ஈ போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.தற்போது நடிகை சமந்தா பாலிவுட்டிலும்  கலம் இறங்கியுள்ளதாள் சினிமா உலகில் பெரும் வரவேற்பு இவருக்கு கிடைத்துள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இவர் நடித்துவிட்டார் .அண்மையில் இவர் நடிப்பில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம் வெளியாகியது.இவருக்கு அடுத்ததாக குஷி படம் வெளியாக உள்ளது.

தற்போது நடிகை சமந்தா தனது வீட்டில் தோட்டமா வைத்து காய்கறி விளைச்சல் செய்து வருகிறார்.  அந்த புகைப்படங்கள் ஆனது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.