
சீமானுக்கும், நடிகை விஜயலட்சுமிக்கும் இடையேயான பிரச்சனை பூதாகரமாக வெடித்து, ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி பேசினர். இணையத்தில் இருவரின் வீடியோக்கள் தான் வைரலாக பரவியது. அதனால், பல சர்ச்சைகளும் எழுந்தது. நடிகை விஜயலட்சுமி பிரண்ட்ஸ் உட்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் சீமான் குறித்து பேசிய கருத்து வைரலாக பரவி வருகிறது. அவர் தெரிவித்திருப்பதாவது, மகிழ்ச்சி திரைப்படத்தில் சீமானும், அதில் நடித்திருந்த நடிகை பாவனாவும் நடந்து கொண்ட விதம் படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் தலைகுனிய வைத்தது.
கோயம்புத்தூரில் படப்பிடிப்பு நடந்த போது, இருவரும் செய்த செயல்கள், பார்ப்பவர்களை தலைகுனிய வைத்தது. சீமான் வேற மொழி நடிகைகள் நிறைய பேரை தன் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.