அடேங்கப்பா.. ஒரே வீட்ல இவ்ளோ பேரா..? பலரும் பார்த்திராத.. வில்லி நடிகையின் நெகிழ வைக்கும் பாசக்கார குடும்பம்..!

நடிகை ஒய் விஜயா தமிழில், வாணி ராணி, மன்மத லீலை, மூன்று முடிச்சு, ஆசை அறுபது நாள், பெண்ணைச் சொல்லி குற்றமில்லை உட்பட பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர். அதன் பிறகு, அம்மன் திரைப்படங்களில் வில்லியாக நடித்து மிரட்டினார். வெள்ளி திரை மற்றும் சின்ன திரையில் வில்லியாக நடித்து பிரபலமான இவர் நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்தினருடன் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.

   

கூட்டுக் குடும்பமாக அனைவரும் மகிழ்ச்சியாக வாழும் அவர்களின் வீடு அமைதியாகவும் அழகாகவும் இருக்கிறது. அவர் பேசியதாவது, என்னுடன் பிறந்த சகோதர, சகோதரிகள் பத்து பேர். நாங்கள் எப்போதும் ஒன்றாகத்தான் இருப்போம். நான்கு தம்பிகள் மற்றும் ஐந்து சகோதரிகள்.

ஒரு தம்பி அமெரிக்காவில் இருக்கிறான். இரண்டு தம்பிகள் என்னோடு இருக்கிறார்கள். மற்றொரு தம்பி கடப்பாவில் இருக்கிறான். கடப்பாவில் தான் மத்த சகோதரிகளும் இருக்கிறார்கள். அங்கு தான் நாங்கள் எல்லோரும் இருந்தோம். இப்போது இங்கு வந்துவிட்டோம். தம்பிகள் மட்டுமல்லாமல், அவர்களின் மனைவிகளும் எங்களோடு மிகுந்த அன்பாக இருப்பார்கள்.

இப்படி ஒரு குடும்பம் யாருக்கும் கிடைக்காது. என் கணவரும் என்னை நன்றாக பார்த்துக் கொள்வார். திருமணத்திற்கு பிறகு தான் என் வாழ்க்கையே மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு, ஏதாவது ஒன்று என்றால் உடனே என் தம்பிகள் ஓடி வந்து விடுவார்கள். என்னுடைய சொந்த விஷயங்களையும் என் தம்பிகளுடன் தான் பகிர்ந்து கொள்வேன்.

ஒரு முறை எனக்கு உடல் நலம் சரியில்லாத போது, என் கணவர் ஊரில் இல்லை. அப்போது என் கடைசி தம்பி தான் வந்து இருந்தான் என்று கூறும்போது அவரின் கண்களில் கண்ணீர் வழிந்து விட்டது. உடனே அவரின் சகோதரர் மற்றும் அவரின் மனைவி என்று அனைவருமே கண்கலங்கி விட்டனர். இதனை பார்த்த தொகுப்பாளர் இப்படி ஒரு குடும்பத்தை எங்குமே பார்க்க முடியாது என்று கூறியிருக்கிறார்.