சரத்குமாருக்கு வாழ்க்கை கொடுத்த கேப்டன்.. அவர் இல்லனா சினிமாக்கே வந்துருக்க முடியாது.. பலரும் அறியாத நெகிழ்ச்சி கதை..!

மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பல நடிகர் நடிகைகளின் வாழ்க்கையில் ஒளியேற்றியுள்ளார். சக மனிதர்களை வளர்த்து விடுவதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார். அவரை நம்பி இருந்த யாரும் தோற்றுப் போனதில்லை என்ற அளவிற்கு உதவிகளை வாரி வழங்கியவர்.

   

அந்த வகையில் பிரபல நடிகர், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராகவும் இருக்கும் சரத்குமாரை வளர்த்து விட்டதில் மிகப்பெரிய பங்கு விஜயகாந்த்திற்கு இருக்கிறது. அதாவது, முதன் முதலில் சரத்குமார் ஒரு திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். அந்த திரைப்படம் பெரிய தோல்வி அடைந்ததால், கடனாளியாகிவிட்டார்.

அந்த சமயத்தில் புலன் விசாரணை திரைப்படத்திற்காக ஆஜானுபாகுவான ஒரு வில்லன் தேவைப்பட்டுள்ளார். விஜயகாந்திற்கு மேக்கப் போடும் உதவியாளர் ஒருவர், சரத்குமார் பற்றி கூறியிருக்கிறார். ஆனால் அவர் திரைப்படங்களில் நடித்ததில்லை. தயாரிப்பாளர் தான். பார்ப்பதற்கு கம்பீரமாக இருப்பார் என்று கூறியவுடன் விஜயகாந்த் அவரை நேரில் சென்று பார்த்துள்ளார்.

கம்பீரமான தோற்றத்துடன் இருந்த சரத்குமாரை உடனே புலன் விசாரணை திரைப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். அந்த திரைப்படத்தில் விஜயகாந்த்திற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதோ, அதே அளவிற்கு முக்கியத்துவம் சரத்குமாருக்கும் கொடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் வில்லனாகவும் கதாநாயகனாகவும் நடித்து இன்று உயர்ந்த நிலையில் இருக்கிறார் சரத்குமார்.