தந்தையின் வழியில் மகள்.. மிக எளிய முறையில்.. மரக்கன்றுகளோடு நடந்த விவேக் மகள் திருமணம்..!

சின்ன கலைவாணர் விவேக் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து மக்களை கலங்கடித்தவர். தன் நகைச்சுவை மூலம் பல நல்ல கருத்துக்களை மக்களிடையே விதைத்தவர். அவரை போன்ற ஒரு நல்ல கலைஞர் மற்றும் சிறந்த மனிதர் இனிமேல் பிறந்து தான் வரவேண்டும் என்றே கூறலாம்.

   

அது மட்டுமன்றி மறைந்த முன்னாள் பிரதமர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் கனவை மெய்யாக்கும் முயற்சியை கையில் எடுத்து அதிகமான மரக்கன்றுகளை நட்டு வந்தார். பள்ளி கல்லூரிகளிலும், அதுபோன்று விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார். அவரை பின்பற்றி பல மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.

ஆனால் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு அவர் மறைந்த செய்தி வெளியாகி மக்களை அதிர்ச்சிக்குள்ளாகியது. அவர் நம்மை விட்டு மறைந்தாலும் அவரின் நகைச்சுவை நிறைந்த சமுதாய கருத்துக்கள் நம்மோடு தான் இருக்கும்.

இந்நிலையில் அவரின் மகளான தேஜஸ்ரீக்கு எளிமையாக நேற்று திருமணம் நடந்திருக்கிறது. சென்னை விருகம்பாக்கத்தில் இருக்கும் விவேக்கின் இல்லத்தில் தேஜஸ்வினிக்கும் பரத் என்பவருக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் எளிய முறையில் திருமணம் நடந்திருக்கிறது.

மேலும், தன் தந்தையின் வழியில் மணமகள் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கியிருக்கிறார்.