இது என்னடா புது விளையாட்டா இருக்கு….! நம்ம ஊரு ரொனால்டோ யார் பா…. வாங்க வந்து இந்த பானையை உடைங்க…!!!

இளைஞர் ஒருவர் பானையை காலால் எட்டி உதைத்து உடைக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பொதுவாக பண்டிகை நாட்களில் கிராமப்புறங்களில் விதவிதமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அதிலும் பொங்கல் பண்டிகையில் கட்டாயம் பாரம்பரிய விளையாட்டுகளான பல விளையாட்டுகள் விளையாடப்படும்.

   

அதாவது ஓட்டப்பந்தயம், பானையை உடைப்பது,  சைக்கிள் ரேஸ், ஜல்லிக்கட்டு போன்றவை மிகவும் பிரபலம். பொதுவாக கிராமப்புறங்களில் இது போன்ற விளையாட்டுகளை விளையாடுவதில் ஒரு மகிழ்ச்சி ஏற்படும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பொதுவாக விழாக்களில் பானையை கண்ணை கட்டிக்கொண்டு குச்சியால் வைத்து அடிப்பதை பார்த்திருப்போம்.

ஆனால் இங்கு இளைஞர்களின் வீரத்தை சோதிக்கும் வகையில் இளைஞர்கள் காலால் பானையை உதைத்து உடைக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. பல இளைஞர்கள் முயற்சி செய்து கடைசியில் ஒரு இளைஞர் பானையை உடைத்து விடுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது, இதனை நீங்களும் பாருங்கள்…