CWC 4 நிகழ்ச்சியை விட்டு திடீரென விலகும் நடுவர்… இதுதான் காரணமா?… வருத்தத்தில் புலம்பும் ரசிகர்கள்…

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் ரியாலிட்டி ஷோக்க்களில் ஒன்று குக் வித் கோமாளி. கொரோனா லாக்டவுன் சமயத்தில் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவை பெற்று மூன்று சீசன்களை கடந்தது. தற்பொழுது 4வது சீசன் ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இறுதி  கட்டத்தையும் எட்டியுள்ளது.

   

இந்த சீசனில் மூன்று சீசன்களிலும் கோமாளியாக கலக்கிய சிவாங்கி குக்காக களமிறங்கி கலக்கி வருகிறார். ஒரு சமையல் நிகழ்ச்சியை இவ்வளவு காமெடியாக கொடுக்க முடியும் என்பதை குக் வித் கோமாளி நிகழ்ச்சி நிகழ்ச்சியின் இந்த சீசனும் நிரூபித்துள்ளது. தற்பொழுது ரசிகர்களின் பேராதரவை பெற்று குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி ஆனது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

இதில் முதல் போட்டியாளராக சிவாங்கி நுழைய உள்ளார் என்றும் இணையத்தில் கூறப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து இந்த சீசனின் டைட்டிலை யார் வெல்வார்கள் என அறிய  ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தற்பொழுது இந்த நான்கு சீசன்களிலும் நடுவராக இருந்து வருபவர்கள் வெங்கடேஷ் பட் மற்றும் செப் தாமு.

இந்நிலையில் வெங்கடேஷ் பட் அவர் தற்பொழுது இந்நிகழ்ச்சியை விட்டு விலக இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு காரணம் அவர் கடந்த ஒரு சில நாட்களாகவே வெளிநாட்டில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட அவர் அங்கேயே செட்டில் ஆகிவிட்டாரா அல்லது நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இத்தகவல்  உண்மையா என்பது நமக்கு தெரியவில்லை.