‘நினைவிருக்கும் வரை’ பட நடிகை கீர்த்தி ரெட்டி இப்ப எப்படி உள்ளார் தெரியுமா ?……. வைரலாகும் புகைப்படங்கள்….

இயக்குனர் கே சுபாஷ் இயக்கத்தில் கே முரளிதரன் தயாரிப்பில் 1099 ஆம் ஆண்டு வெளியான படம் ‘நினைவிருக்கும் வரை’. இப்படத்தில் பிரபு தேவா ,கீர்த்தி ரெட்டி, ஆனந்த், ரஞ்சித், விவேக், தாமு போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

   

இப்படத்தில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை கீர்த்தி ரெட்டி. இவர் பெங்களூரில் வளர்ந்தார் .பெங்களூரில்  உள்ள கிருஷ்ணமூர்த்தியின் தி வேலி பள்ளி  தனது பள்ளி படிப்பை முடித்தார்.

 

கனடாவில் உள்ள  ரைர்சன் பல்கலைக்கழத்தில் பட்ட படிப்பு படித்தார்.இவர் 8 ஆண்டுகளாக  பரதநாட்டியம்  கற்றுக்கொண்டார்.1996 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து இவர் 1997 ஆம் ஆண்டு வெளியான’ தேவதை’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் நந்தினி, ஜாலி, இனியவளே போன்ற பல படங்களில்  நடித்துள்ளார்.நடிகை கீர்த்தி ரெட்டி இந்தி, தெலுங்கு, தமிழ் போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார்.

நடிகை கீர்த்தி ரெட்டி சுமந்த் என்பவரை 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.  இருவரின்  கருத்து வேறுபாட்டின் காரணமாக 2006ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். அதன் பிறகு  நடிகை கீர்த்தி ரெட்டி கார்த்திக் என்பவரை 2014 ஆம் ஆண்டு  திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இவரின் தற்போதைய  புகைப்படமாது இணையத்தில் வெளியாகியுள்ளது.