எடுடா வண்டிய…! மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பாலா-ராகவா லாரன்ஸ்… வைரல் புகைப்படங்கள்..!!!

மாற்றுத்திறனாளி குழந்தைகளை அழைத்துச் செல்வதற்காக பைக் கேட்ட பெற்றோர்களுக்கு ராகவா லாரன்ஸ் மற்றும் கேபிஒய் பாலா இருவரும் இணைந்து உதவி செய்த சம்பவம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

   

சின்னத்திரையாக இருந்தாலும் சரி, வெள்ளி திரையாக இருந்தாலும் சரி கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்பவர்கள் என்று எடுத்துக் கொண்டால் குறைவான அளவு தான் இருக்கிறார்கள்.

சில பிரபலங்கள் வெளிப்படையாக உதவி செய்கிறார்கள். சில பிரபலங்கள் செய்யும் உதவி என்பது தெரியவே தெரியாது. அந்த வகையில் நடிகர் ராகவா லாரன்ஸ் ஆதரவற்ற பல குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார்.

 

அவர்களின் படிப்பு செலவு மற்றும் முதியவர்களுக்கு என்று பல உதவிகளை செய்து வருகிறார். அதேபோல் கலக்கப்போவது யாரு என்று நிகழ்ச்சி மூலமாக காமெடியனாக இருந்து பின்னர் தற்போது பல ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்து பேரும் புகழையும் பெற்றிருக்கிறார்.

பாலா குழந்தைகளின் படிப்பு, ஆதரவற்ற முதியவர்களின் பராமரிப்பு, ஆம்புலன்ஸ் வசதி என பலருக்கும் பண உதவி செய்து வருகிறார். சமீபத்தில் பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் இளைஞருக்கு கூட வாகனம் ஒன்றை வாங்கிக் கொடுத்திருந்தார்.

அதை தொடர்ந்து கணவனை இழந்த பெண்ணிற்கு ஆட்டோ ஒன்றை ராகவா லாரன்ஸ் மாஸ்டருடன் சேர்ந்து வாங்கி கொடுத்திருந்தார். தற்போது மீண்டும் ஒரு வீடியோவை  பாலா வெளியிட்டு இருக்கிறார்.

அதில் மாற்றுத்திறனாளிகளின் அழகான குழந்தைகளை அழைத்துச் செல்வதற்கு பெற்றோர்களுக்கு போதிய வசதி இல்லை . இந்த குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல ஒரு வாகனம் வேண்டும் என்று கேட்டார்கள்.

நானும் எனது ரோல் மாடலான ராகவா லாரன்ஸ் மாஸ்டரும் இந்த குடும்பத்திற்கு வாகனத்தை வாங்குவதற்கு சரிசமமாக பணத்தை பகிர்ந்து வாங்கி கொடுத்திருக்கிறோம் என்று தெரிவித்திருந்தார். இதை பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.